தேவையான பொருட்கள் :
2 பேருக்குப் போதுமானது
பசுமதி அரிசி :- 1 சுண்டு
நெய் :- 3 மே.க.
மிளகு :- 10
கறுவா :- 4 துண்டு
கராம்பு :- 10
ஏலம் :- 10
பம்பாய் வெங்காயம் :- 1
போஞ்சி :- 50 கிராம்
கரட் :- 50 கிராம்
கோவா :- 50 கிராம்
காளான் ( மஸ்றூம் ) :- 50 கிராம்
செய்முறை :
- வெங்காயம், கரட், கோவா, போஞ்சி, காளான் என்பவற்றைத் துப்புரவு செய்து தனித்தனியாக அளவான சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- தாச்சியில் நெய்யைவிட்டு உருகியபின், அதனுள் மிளகு, கறுவா, கராம்பு, ஏலம் என்பவற்றையிட்டுப் பொரியவிடவும்.
- அவை பொரிந்துவரும்போது வெங்காயம், கரட், போஞ்சி என்பவற்றையிட்டு வதங்கவிடவும்.
- பின்பு அரிசியைக் கழுவி வதங்கிய கலவையிலிட்டு நன்கு கிளறிச் சேர்த்துக் கொண்டபின் 2 தம்ளர் தண்ணீர்விட்டு கோவா, காளான், அளவிற்கு உப்பு என்பவற்றைச் சேர்த்து மூடி அவியவிட்டு அரிசி அவிந்துவரும்போது இறக்கி வாயகன்ற பாத்திரத்தில் கொட்டிப் பரவி விடவும்.
Comments
Post a Comment