ருசியான பிரியாணி செய்வது எப்படி - How to make delicious biryani

 

தேவையான பொருட்கள் :

(இது 4 பேருக்கு போதுமானது)

சம்பா அரிசி - 1/2 கிலோ கிராம் 

கரட் - 125 கிராம்

லீக்ஸ் - 125 கிராம்

உருளைக்கிழங்கு - 125 கிராம்

போஞ்சி - 125 கிராம்

கோவா - 125 கிராம்

தக்காளிப்பழம் - 125 கிராம்

கஜு - 50 கிராம்

பிளம்ஸ் - 50 கிராம்

மாஜரின் - 50 கிராம்

உப்புத்தூள் - தேவையான அளவு

மிளகுதூள் - தேவையான அளவு

பச்சைப் பட்டாணிக்கடலை - 100 கிராம்

இறால் - 1/2 கிலோ கிராம் 

சிலி சோஸ் - 1 மேசைக்கரண்டி

சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 மேசைக்கரண்டி (நிரப்பி)

சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)

சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 1 மேசைக்கரண்டி (நிரப்பி)

கறுவா - ( 2 " நீளம் ) 

ஏலம் - 10

கராம்பு - 10

மிளகு - 10

உள்ளி - 3 பல்லு 

மஞ்சள்த்தூள் - 2 சிட்டிகை 

தேசிப்புளி - 1 மேசைக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 1/4 போத்தல்





செய்முறை : 

  • இறாலைத் துப்புரவு செய்து உப்புத்தூள்,சிலிசோஸ் போட்டு புரட்டி பொரித்தெடுக்க வேண்டும்.
  • முதலில் கறுவா,ஏலம்,கராம்பு,உள்ளி,மிளகு என்பவற்றை இடித்து ஒரு மெல்லிய துணியில் பொட்டலமாகக் கட்டி வைக்கவும் . 
  • கடலையைத் துப்புரவாக்கி மூன்று மணி நேரம்வரை ஊற வைக்குக . 
  • பின்பு பானையில் நீரைக் கொதிக்க வைத்து , அரிசியைக் கழுவிப்போட்டு , கடலையையுமிட்டு அதனுடன் பொட்டலத்தையும் மஞ்சள்த் தூளையும் போட்டு அவியவிட்டு அரிசி அவிந்ததும்,பொட்டலத்தை எடுத்துவிட்டு வடித்து இறக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி தேசிப்புளியும் விட்டுக் கிளறி ஆறவிடவும் . ( தண்ணீர் அளவாக வைத்து புழுங்க வைத்துக் கொள்ளலாம் . )
  • கரட்,போஞ்சி,லீற்ஸ்,உருளைக்கிழங்கு என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் . 
  • கோவாவையும் தக்காளிப் பழத்தையும் தனித்தனியாகச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 
  • கஜுவைப் பாதித் துண்டுகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். 
  • பின்பு தாச்சியை அடுப்பில் வைத்து மாஜரினை இட்டு உருகவிட்ட பின் கஜு,பிளம்ஸ் என்பவற்றைத் தனித்தனியாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். 
  • தாச்சியில் மிகுதியாக உள்ள மாஜரினில் வெட்டிய வெங்காயம் . பச்சைமிளகாய்,கறிவேப்பிலை என்பவற்றைப் போட்டு சிறிது வதக்கவும். 
  • பின்பு அதனுள் மரக்கறிகளையும் போட்டு மூடி வதங்கவிட்டு முக்கால் பதமாக வதங்கியபின் வெட்டி வைத்துள்ள கோவா,தக்காளிப்பழம்,கடலை,மிளகுதூள்,உப்புத் தூளையும் சேர்த்து மூடி வதங்கவிட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். 
  • பின்பு ஆறவைத்துள்ள சோற்றினில் வதக்கிய மரக்கறி வகைகள் , பொரித்த இறால்,பொரித்த கஜு,பிளம்ஸ் என்பவற்றையிட்டு நன்கு சேர்த்துக் கொள்க 


குறிப்பு :- 📌

  • மரக்கறி வகைகளை எண்ணெயில் வதங்க வைப்பதற்குப் பதிலாக நீராவியில் அவித்தெடுத்து சிறிது நேரம்,வெங்காயத்துடன் சேர்த்து வதங்கவிட்டும் பயன்படுத்தலாம்.


Comments