தேவையானவை :
பால் - 1 லிட்டர் ,
பாஸ்மதி அரிசி 1 கப் ,
பாசிப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன் ,
நெய் 3 டேபிள்ஸ்பூன் ,
சீவிய முந்திரி 2 டேபிள்ஸ்பூன் ,
சர்க்கரை ( அல்லது ) வெல்லம் ஒன்றரை கப் ,
ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன் ,
குங்குமப்பூ 1 சிட்டிகை .
செய்முறை : ✒
பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள் .
அரிசி , பருப்பைக் கழுவி , அடுப்பிலிருக்கும் பாலோடு சேருங்கள் .
மிதமான தீயில் நன்கு வேகவிடுங்கள் .
அரிசி நன்கு குழைந்து வெந்தபின் சர்க்கரை சேருங்கள் .
( சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்ப்பதானால் , பொடித்த வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து , வெல்லம் கரையும் வரையில் கொதிக்கவைத்து வடிகட்டி , வெந்து கொண்டிருக்கும் பால் , அரிசி கலவையில் சேர்க்கலாம் . )
நன்கு சேர்ந்து வரும்வரையில் கிளறி , இறக்குங்கள் .
குங்குமப் பூவை , சிறிது சூடான பாலில் கரைத்து , சேருங்கள் .
முந்திரியை சிறிது நெய்யில் வறுத்துப் பொங்கலில் போட்டு , கடைசியில் மீதமுள்ள நெய் , ஏலக்காய் சேர்த்து , நன்கு கிளறிப் பரிமாறுங்கள் .

Comments
Post a Comment