தேவையானவை :
பால் - ஒரு லிட்டர் ,
சர்க்கரை அரை கப் ,
பாதாம் 20 ,
முந்திரி - 10 ,
குங்குமப்பூ - 1 சிட்டிகை ,
ஏலக்காய் தூள் அரை டீஸ்பூன் .
செய்முறை : ✒
பதினைந்து பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடுங்கள் .
பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு , தோலை உரித்து , சிறிது பால் , முந்திரி சேர்த்து அரைத் தெடுங்கள் .
மீதியிருக்கும் பாதாமை மெல்லியதாக சீவிக் கொள்ளுங்கள் .
அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சுங்கள் .
பால் பத்து நிமிடம் கொதித்ததும் பாதாம் , முந்திரி விழுது , சர்க்கரை சேர்த்து , மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு , இறக்குங்கள் .
அதில் சீவிய பாதாம் , ஏலக்காய்த் தூள் , சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து , நன்கு கலந்து , ஆறவிடுங்கள் .
ஆறியபின் , குளிரவைத்துப் பரிமாறுங்கள் .

Comments
Post a Comment